‘வாரத்துல 2 நாளு வருவாரு.. வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு..’: கமல் முன்பு சாண்டி செய்த சேட்டை 

 

‘வாரத்துல 2 நாளு வருவாரு.. வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு..’: கமல் முன்பு சாண்டி செய்த சேட்டை 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நேற்று சாண்டி மாஸ்டர் கமல் குறித்து பாடிய பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

சென்னை: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நேற்று சாண்டி மாஸ்டர் கமல் குறித்து பாடிய பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

பிக் பாஸ் மூன்றாவது சீசனையும், முதல் இரண்டு சீசன்களை போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஜூன்.23ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய மூன்றாவது சீசனில் முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார். அதைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு வனிதா, சரவணன், மோகன் வைத்தியா, மீரா, மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

அதில் மோகன் வைத்தியா முதல் ஆளாக காப்பாற்றப்பட்டார். அதையடுத்து சாண்டி மாஸ்டர் கமல்ஹாசனின் குறித்து ஒரு பாடல் வைத்துள்ளதாக கூறினார். அந்த பாடல், ‘உலகநாயகன் வராரு ஒத்திக்கோ ஒத்திக்கோ.. வாய கொஞ்சம் நீயும் தான் பொத்திக்கோ..! வாரத்துல ரெண்டு நாளு வருவாரு.. அவரு வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு..ஆழ்வர்பேட்டை ஆண்டவா.. த்ரிஷ்டி சுத்தி போடவா.? இந்த வீட்டு உள்ள வா.. வா.. கண்ணே கலைமானே.. நினைத்தேன் உன்னை நானே.. நடுவுல மானே தேனே போட்டுக்கோ..’ என்று அவர் பாடிய ரசிகர்களை மட்டும் இன்றி கமல் ஹசனையையும் வெகுவாக கவர்ந்தது. 

மேலும் இதில் ‘வாயக் கொஞ்சம் நீயும் தான் பொத்திக்கோ’, என்று சாண்டி மாஸ்டர் கூறியது வனிதாவை மறைமுகமாகக் கலாய்ப்பது போல் உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.