வாரத்துக்கு ஒரு தடவையாவது வந்துட்டு போங்களேன் – கோர்ட் டூ சாமியார்

 

வாரத்துக்கு ஒரு தடவையாவது வந்துட்டு போங்களேன் –  கோர்ட் டூ சாமியார்

மாலேகான்  குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் கைதாகி, சிறை சென்று, தற்போது ஜாமீனில் வெளிவந்து, போபால் தொகுதி பாஜக வேட்பாளராகி, பரப்புரையின்போது கோட்சேவுக்கு கொடி பிடிக்கும் சாமியார் பிரக்யா தாகூருக்கு, அவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் புது உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாலேகான்  குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் கைதாகி, சிறை சென்று, தற்போது ஜாமீனில் வெளிவந்து, போபால் தொகுதி பாஜக வேட்பாளராகி, பரப்புரையின்போது கோட்சேவுக்கு கொடி பிடிக்கும் சாமியார் பிரக்யா தாகூருக்கு, அவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் புது உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு ஒவ்வொரு முறை வரும்போதும், வெவ்வேறு காரணம் கூறி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து டிமிக்கி குடுத்து வந்தனர் பிரக்யா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

prakya

காலையில குக்கர்ல‌ விசில் வரல, மொபைல் ரீசார்ஜ் பண்ணாம இருந்ததால கோர்ட்டுக்கு வர்றதுக்கு ஓலா டேக்சி புக் பண்ண முடியல யுவரானர் வரை விதம்விதமாக காரணம் சொல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதை தவிர்த்து வந்திருக்கிறார் பிரக்யா. இன்னைக்கு வேணும்னா விதம்விதமா காரணம் சொல்லி நீதிமன்றத்துக்கு வர்றதை பிரக்யா பயன்படுத்தாலாம், ஆனா சட்டத்துல இப்புடி எல்லாம் ஓட்டை இருக்குன்னு இந்தியாவுக்கே சொல்லிகுடுத்து விதை போட்டது….. சரி நமக்கு எதுக்கு உள்ளூர் பொல்லாப்பு?

hc

வழக்கு விசாரணைக்கு வரும் நாளெல்லாம் கோர்ட்டில் ஆஜராக முடியாவிட்டாலும், வாரத்திற்கு ஒருமுறையாவது குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு வரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டுக்கு போகாம அப்படி என்னதான் மத்த வேலை பிரக்யாவுக்குன்னு சாதாரணமாக நினைக்கவேண்டாம்! தேசப்பிதா யார் தேசவிரோதி யார் என அன்னாரின் பேட்டிகள் வெளியாவது எல்லாம் வெளியே இருப்பதால்தான்.