வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கடையை திறக்க வேண்டும்! புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவு

 

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கடையை திறக்க வேண்டும்! புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரேப்பிட் டெஸ்ட் கிட் இன்னும் வரவே இல்லை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரேப்பிட் டெஸ்ட் கிட் இன்னும் வரவே இல்லை. அது வந்து சோதனை செய்த பிறகே, அதன் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது தெரியும். பரிசோதனைகளில் நாம் இத்தாலி, அமெரிக்காவைக் காட்டிலும் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருவதைக் காணும் போது அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கடை

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகளை திறக்க வேண்டும் என்றும் உத்தரவை மீறும் மளிகைகடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். திங்கள், புதன், வெள்ளி உள்ளிட்ட 3 நாட்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.