வாரச்சந்தைகளை மூட உத்தரவு!

 

வாரச்சந்தைகளை மூட உத்தரவு!

சீன நாட்டில் பரவத் தொடங்கி தற்போது, 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.

சீன நாட்டில் பரவத் தொடங்கி தற்போது, 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, நாட்டின் பல கோவில்கள் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. குறிப்பாக பல கோவில்களில் இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரச்சந்தைகளை மூட உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளையும் வரும் 31 ஆம் தேதிவரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா எதிரொலியாக  பெரிய நகைக்கடைகள், பெரிய ஜவுளிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் நாளை முதல் மூடப்படும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.