‘வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டை இலை’ : வைரலாகும் ஓபிஎஸ் மகனின் எதுகை மோனை பேச்சு!

 

‘வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டை இலை’ : வைரலாகும் ஓபிஎஸ் மகனின் எதுகை மோனை பேச்சு!

அதிமுக சார்பில் தேனி  மக்களவை தொகுதியில் போட்டியிடும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

தேனி: அதிமுக சார்பில் தேனி  மக்களவை தொகுதியில் போட்டியிடும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் களம் 

stalin

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையி,ல் தமிழக தேர்தல் களம்  சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அதிமுகவும், அதிமுகவை ஆட்சியிலிருந்து அகற்றவும், பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் ஆளுமையைப் பெறவும்  திமுக போராடி வருகின்றது. அதே சமயம் இந்த தேர்தலில் அரசியல் நிர்வாகிகளின் வாரிசுகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதன்படி அதிமுக சார்பாகத் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சூடுபிடிக்கும் தேனி  தொகுதி 

ops

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் உசிலம்பட்டி எம் எல் ஏ ஆகியோருடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அப்பகுதியில் உள்ள பெண்கள் ரவீந்திரநாத்திற்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

ஓபிஎஸ் மகனின் எதுகை மோனை பேச்சு 

raveendranath

அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ரவீந்திரநாத், ‘நீங்கள் எடுக்கும் ஆரத்தியில் உள்ளது வெற்றிலை, வாய் சிவக்கத்தான் வெற்றிலை, உங்கள் வாழ்க்கை சிறக்க  தேர்ந்தெடுங்கள் இரட்டை இலை என்று எதுகை மோனையாகப்  பேசினார்.  மேலும் தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் வெளியூர் காரர்.அவருக்கு நம் தொகுதியில் உள்ள பிரச்னைகள்  தெரியாது, மற்றொருவர் இரட்டை இலை 
சின்னத்தில் வெற்றி பெற்றுவிட்டு தற்போது அதைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியுள்ளார். ஆனால் நான் உங்களில் ஒருவனாக, உங்கள் மகனாகவும், சகோதரனாகவும் உங்களுக்காகப் பாடுபடுவேன்’ என்றார்.

முன்னதாக  தேர்தல் பரப்புரைக்கான பொதுக்கூட்டத்தில்  பேசிய ரவீந்திரநாத், சேரர், சோழர், பாண்டியர்கள் ஆகிய மூவரும் முக்குலத்தோர் என்ற அரியவகை தகவலைச் சொல்லி இணையதள வாசிகளிடம் வாங்கிக்கட்டிக் கொண்டது  குறிப்பிடத்தக்கது.  

இதையும் வாசிக்க: ஜோதிடர் பேச்சை கேட்டு அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்ட சரவணபவன் ராஜகோபால்: கொலை முதல் கைது வரை வழக்கு கடந்து வந்த பாதை!