வாய்ப்பு கிடைத்தால் சிம்புவுக்கு முத்தம் தருவேன்: நடிகை வரலட்சுமி ஓபன் டாக்!

 

வாய்ப்பு கிடைத்தால் சிம்புவுக்கு முத்தம் தருவேன்: நடிகை வரலட்சுமி ஓபன் டாக்!

வாய்ப்பு கிடைத்தால் யாரோ கொலை செய்வீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஷாலின் பெயரை கூறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

சென்னை: வாய்ப்பு கிடைத்தால் யாரோ கொலை செய்வீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஷாலின் பெயரை கூறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். இதில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப் பட்டது. 

முன்னதாக  வெளியான விஷாலின் சண்டக்கோழி 2 படத்திலும், வரலட்சுமி வில்லியாக நடித்திருந்தார். இந்நிலையில் சர்கார், சண்டக்கோழி படங்களில் நடித்ததற்காக தனியார் இணையதளம் ஒன்று அவருக்கு சிறந்த வில்லன்  (பெண்) விருது வழங்கி கௌரவித்தது.

varu

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம், ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும், ஒருவரைக் கொலை செய்ய வேண்டும், ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் உங்கள் சாய்ஸ் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.கேள்விக்கு பதிலளித்த நடிகை வரலட்சுமி ‘சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலை கொலை செய்வேன் மற்றும் யாராவது ஒருவரை திருமணம் செய்வேன்’ என்று கூறினார்.

முன்னதாக வரலட்சுமி, விஷாலும்  நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மையில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.