“வாணி போஜனை கேட்டு என் நம்பருக்கு போன் பண்ணுறாங்க” : ‘ஓ மை கடவுளே’ இயக்குநர் மீது ரியல் எஸ்டேட் அதிபர் புகார்!

 

“வாணி போஜனை கேட்டு என் நம்பருக்கு போன் பண்ணுறாங்க” : ‘ஓ மை கடவுளே’ இயக்குநர் மீது ரியல்  எஸ்டேட் அதிபர் புகார்!

வாணி போஜன் நடிப்பில் வெளியான திரைப்படம்  ‘ஓ மை கடவுளே’. இந்த சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இயக்குநர்  அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், ரித்விகா சிங் , வாணி போஜன் நடிப்பில் வெளியான திரைப்படம்  ‘ஓ மை கடவுளே’. இந்த சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

ttn

இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பூபாலன் என்பவர் ‘ஓ மை கடவுளே’ பட இயக்குநர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகாரளித்துள்ளார்.அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, “கடந்த 25 நாட்களுக்கு முன்பு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம்  ‘ஓ மை கடவுளே’ . இதில் விஜய் சேதுபதி கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அசோக் செல்வன், வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் வாணி போஜன், மீரா என்ற கதாபாத்திரத்தில் அசோக் செல்வனுக்கு தன் செல்போன் எண்ணைக் கொடுப்பார். அந்த எண்  நீண்ட நாட்களாக நான் பயன்படுத்தும் எண். படத்தை பார்த்த சிலர் அது உண்மையான வாணி போஜன் எண்  என்று நினைத்து கொண்டு தினமும் போன் செய்கிறார்கள். ஒருநாளைக்கு 50ற்கும் மேற்பட்ட கால்கள் வருகிறது, நாளாக நாளாக  அவர்களின் தொல்லை அதிகமாகி வருகிறது.

ttn

இதனால் என் தொழிலில் மந்த நிலை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதனால் என் போன் நம்பரை படத்தில் பயன்படுத்திய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்குமாறும், இனியும் வாணி போஜனை கேட்டு எனக்கு போன் செய்யும் பிரச்னையிலிருந்து  விடுவிக்கவும் ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் என் எண்ணை என்னால் மாற்ற  முடியாது. நான் என் ரியல் எஸ்டேட் தொழில்  வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் என அனைவருக்கும் இந்த எண்ணை  தான் கொடுத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.