வாட்ஸப்பில் வெளியான பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்: அதிர்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள்!

 

வாட்ஸப்பில் வெளியான பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்: அதிர்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள்!

வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் அரையாண்டு பிளஸ்-2 வேதியியல் வினாத்தாள் வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் அரையாண்டு பிளஸ்-2 வேதியியல்  வினாத்தாள் வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாளில் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். அந்த வகையில், நாளை வேதியியல் தேர்வு நடைபெற இருந்தது.

இந்நிலையில், அந்த தேர்வின் வினாத்தாள்கள் வாட்ஸப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நாளை தேர்வு நடைபெற உள்ளதால், புதிய வினாத்தாள் தயாரிப்பதா அல்லது தேர்வை ரத்து செய்வதா என்ற கோணத்தில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.