வாடகைக்கு வாங்கிய குழந்தை : கையில் ஏந்தி பிச்சை எடுத்த பெண் கைது !

 

வாடகைக்கு வாங்கிய குழந்தை : கையில் ஏந்தி பிச்சை எடுத்த பெண் கைது !

காட்பாடியில் இன்று, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

சமீப காலமாகக் குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகமாகி வருகிறது. இதற்கு எதிராகப் பல சட்டங்கள் இருந்தாலும், தடுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக, குழந்தையை ஆடி, பாடச் சொல்லி பிச்சை எடுப்பவர்களும், குழந்தையைக் காட்டி பிச்சை எடுப்பவர்களுக்கு இருந்து தான் வருகிறார்கள். இந்நிலையில், வாடகைக்கு வாங்கிய குழந்தையை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்த பெண் கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டுள்ளார். 

ttn

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அப்போது, ஒரு பெண் கை குழந்தையுடன் பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரை அழைத்து சண்முகசுந்தரம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அதில் அந்த பெண், தான் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் வாடகைக்கு இந்த குழந்தையை வாங்கி பிச்சை எடுக்க உபயோகப்படுத்தியதாகக் கூறியுள்ளார். 

ttn

இதனால் ஆத்திரமடைந்த ஆட்சியர் அந்த பெண்ணை கைது செய்யும் படி, காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் படி, அந்த பெண்ணை கைது செய்த போலீசார், குழந்தையை அரியூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.