வாங்க சார், காஷ்மீருக்கு வாங்க என அழைத்த கவர்னருக்கு ராகுல் பதில்!

 

வாங்க சார், காஷ்மீருக்கு வாங்க என அழைத்த கவர்னருக்கு ராகுல் பதில்!

காஷ்மீர் பயணம் மேற்கொள்ள சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்; விமானம் தேவையில்லை, ஆளுநர் அழைத்ததால் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் நானும் இணைந்து காஷ்மீர் வரத் தயார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் பயணம் மேற்கொள்ள தயார்

காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் மகனும், முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் காஷ்மீரில் வன்முறை நடப்பதாக கூறினார். உடனடியாக எதிர்வினையாற்றிய ஆளுநர் சத்ய பால் மாலிக், ராகுல் காந்தி பொறுப்புள்ள மனிதர், அவர் இதுபோல் பேசக்கூடாது, காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதாக செய்தி வெளியிட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனத்தை எச்சரிக்கை செய்திருக்கிறோம், எல்லா மருத்துவமனைகளும் ராகுல் காந்திக்காக திறந்தே உள்ளது, ராகுல் காந்தியை இங்கே அழைக்கிறேன், அவருக்காக விமானத்தை அனுப்புகிறேன், இங்கே நேரில் வந்து இங்கேயிருக்கும் சூழலை பார்த்துவிட்டு பேசுமாறு பதிலளித்திருந்தார்.

Rahul Gandhi

காஷ்மீர் கவர்னரின் கருத்துக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ராகுல் காந்தி,  ”காஷ்மீர் பயணம் மேற்கொள்ள சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்; விமானம் தேவையில்லை, ஆளுநர் அழைத்ததால் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் நானும் இணைந்து காஷ்மீர் வரத் தயார். ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக்கில் பயணம் மேற்கொள்ள தயார்” என்று குறிப்பிட்டுள்ளார்.