வாங்குற காசுக்கு ஒழுங்கா வேலை செய்ங்க….பீகாரில் போலீசாரை கொடூரமாக தாக்கிய கிராம மக்கள்! வைரலாகும் வீடியோ…

 

வாங்குற காசுக்கு ஒழுங்கா வேலை செய்ங்க….பீகாரில் போலீசாரை கொடூரமாக தாக்கிய கிராம மக்கள்! வைரலாகும் வீடியோ…

பீகாரில் காவலர் ஒருவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

பீகாரில் காவலர் ஒருவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த  இரண்டு சிறுவர்கள் காணாமல் போனார்கள். அவர்களை 2 நாட்களாக காணவில்லை என்ற உறவினர்கள் தேடி வந்தனர். மேலும் சிறுவர்கள் காணாமல்போனது குறித்து காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டிருந்தது.

cops

இந்நிலையில்  காணாமல்போன சிறுவர்களின் உடல் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது. சிறுவர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய கிராம மக்கள், காவல்துறையினர் சிறுவர்களின் மரணம் குறித்து எந்தவித நடவடிக்கை எடுக்கமால் சிறுவர்கள் சாக்கடையில் மூழ்கி இறந்தாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள், காவலர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும்மேலும் ஆபாச வார்த்தைகளிலும் திட்டினர். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.