வாங்கிய கடனைத் திருப்பித் தரவில்லை என்பதற்காக இப்படியா பண்றது..!?

 

வாங்கிய கடனைத் திருப்பித் தரவில்லை என்பதற்காக இப்படியா பண்றது..!?

வாங்கிய கடனைத் திருப்பி தரவில்லை என்ற காரணத்திற்காக,பட்டப் பகலில் மின் கம்பத்தில் பெண் ஒருவரைக் கட்டி வைத்து அடித்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
கர்நாடக மாநிலம்,ராமநகரா மாவட்டம் கொடிகெஹள்ளி கிராமத்தைச்  சேர்ந்தவர் ராஜம்மா.`

வாங்கிய கடனைத் திருப்பி தரவில்லை என்ற காரணத்திற்காக,பட்டப் பகலில் மின் கம்பத்தில் பெண் ஒருவரைக் கட்டி வைத்து அடித்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
கர்நாடக மாநிலம்,ராமநகரா மாவட்டம் கொடிகெஹள்ளி கிராமத்தைச்  சேர்ந்தவர் ராஜம்மா.

hotel

அதே பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார்.உணவகத்தை விரிவாக்கம் செய்ய எண்ணிய ராஜம்மா அந்த ஊரில் இருந்த சிலரிடம் 12 லட்சம் ரூபாய் வரை கடனாக வாங்கி ஹோட்டலை பெரிய லெவலில் மாற்றம் செய்திருக்கிறார்.
ஆனால்,எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் இல்லை.இதனால்,ஹோட்டலை இழுத்து மூடிவிட்டு தலை மறைவானதாகத் தெரிகிறது.கடன் கொடுத்தவர்கள் இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை! தலை மறைவான ராஜம்மாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை!

beating

இந்த நிலையில்,தர்மசாலாவில் இருந்த ராஜம்மாவை வலுக்கட்டாயமாக அழைத்து வந்த ஊர்மக்களில் சிலர் அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் நடக்கும் போது யாரும் தடுக்க முன் வரவில்லை என்பதும் அதிர்ச்சியாக இருக்கிறது.
தாக்குதல் சம்பவம் நடப்பதை அறிந்த போலீசார் உடனடியாக அங்கு வந்து,தாக்குதலில் ஈடுபட்ட ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.தப்பி ஓடி தலைமறைவாக உள்ள சிலரையும் போலீசார் தேடி வருகி