வாக்குப்பெட்டியையே திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள்!

 

வாக்குப்பெட்டியையே திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில்  காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற மர்ம நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில்  காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற மர்ம நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காலை முதலே வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவிற்கு இடையே சில பரப்பரப்பு சம்பவங்களும், சுவாரஸ்யங்களும் அரங்கேறியுள்ளன. 

Vote box

பெரியமுள்ளிப்பட்டி கிராமத்தில் காவலர்களை தள்ளிவிட்டு, வாக்குச்சாவடியின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து வாக்குப்பெட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருடர்களை துரத்திப்பிடித்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து வாக்குப்பெட்டியை மீட்டனர். இதையடுத்து திருடர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.