வாக்களிக்க வந்த பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள்: புகைப்படம் உள்ளே!

 

வாக்களிக்க வந்த பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள்: புகைப்படம் உள்ளே!

சென்னையில் மக்களோடு மக்களாய் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களித்து வருகின்றனர். 

சென்னை: சென்னையில் மக்களோடு மக்களாய் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களித்து வருகின்றனர். 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து  தமிழகம்  உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு 18-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது.

சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில்  ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினர். அந்த வரிசையில் மக்களோடு மக்களாய் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களித்து வருகின்றனர். 

நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பம் சென்னையில் உள்ள தி.நகரில் தனது வாக்கை செலுத்தினார். 

suriya

சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரபு அவருடைய மகனும், நடிகருமான மகன் விக்ரம் பிரபு உள்பட குடும்பத்தாருடன் வாக்களித்தார்.

suriya

நடிகர் விஜய் ஆண்டனி சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் வாக்களித்தார்.

vijayantonty

நடிகர் அர்ஜுன் சென்னையில் உள்ள கிரௌன் பிளாசாவில் தனது வாக்கை செலுத்தியுள்ளார்.  

 

arjun

நடிகர் கௌதம் கார்த்திக் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கை செலுத்தினார்.  

gautham karthik

நடிகர் தனுஷ் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

dhanush

 

இதையும் படிங்க: மக்களவை தேர்தல் 2019 Live Updates; ஜனநாயக கடமையை நிறைவு செய்தார் மு.க.ஸ்டாலின்!