வழி தவறி வந்து பசியால் மயங்கி கிடந்த முதியவர்.. மனித நேயத்துடன் செயல்பட்ட இளைஞர் : நெகிழ்ச்சி சம்பவம்!

 

வழி தவறி வந்து பசியால் மயங்கி கிடந்த முதியவர்.. மனித நேயத்துடன் செயல்பட்ட இளைஞர் : நெகிழ்ச்சி சம்பவம்!

ராமநாதபுரம் பரமக்குடி அடுத்த சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம்(80). அவரது மனைவி இறந்து விட்ட நிலையில் மகனுடன் வசித்து வருகிறாராம்.

ராமநாதபுரம் பரமக்குடி அடுத்த சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம்(80). அவரது மனைவி இறந்து விட்ட நிலையில் மகனுடன் வசித்து வருகிறாராம். இவர் கடந்த 26 ஆம் தேதி பரமக்குடி ஸ்டேட் வங்கியில் முதியோர் உதவித் தொகை வாங்குவதற்காகச் சென்றுள்ளார். வயது முதிர்வின் காரணமாகச் சரியாகப் பேசாமலும், நடக்க முடியாமலும் இருந்த இவர், வங்கிக்குச் சென்ற அன்று நிலைதடுமாறியதால் சென்னை செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டு தஞ்சைக்குச் சென்றுள்ளார். 

ttn

அங்கு யாரையும் தெரியாமல், பேசவும் முடியாமல் 5 நாட்களாகச் சுற்றித் திரிந்த நாகரத்தினம் பசியால் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். அவரை பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர். அந்த வழியே சென்ற வல்லத்தைச் சேர்ந்த ரியாசுதீன்ன் இளைஞர் முதியவர் பசியால் விழுந்து கிடப்பதை அறிந்து அவருக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின்னர் முதியவரிடம் விசாரித்ததில், அவர் சாத்தனூர் என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லையாம். அதனால், அவர் சாத்தனூரை சேர்ந்தவர் என்று அறிந்து கொண்ட ரியாசுதீன், வாட்ஸ் ஆப் மூலம் முதியவரின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். 

ttn

அதன் மூலம், நாகரத்தினத்தின் மகன்  ரியாசுதீனை தொடர்பு கொண்டு, தன் அப்பா தான் அவர் என்று தகவல் கொடுத்துள்ளார். அதனையடுத்து, நேற்று அதிகாலை தஞ்சை சென்ற முதியவரின் மகன், ரியாசுதீனுக்கு நன்றி தெரிவித்து விட்டு, அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.