வழிபாட்டுத் தலங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மதத் தலைவர்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தல்

 

வழிபாட்டுத் தலங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மதத் தலைவர்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தல்

வழிபாட்டுத் தலங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மதத் தலைவர்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொச்சி: வழிபாட்டுத் தலங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மதத் தலைவர்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், வழிபாட்டுத் தலங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மதத் தலைவர்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால் மதத் தலைவர்கள் தங்கள் ஆதரவை உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தின் நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தாலும், எந்த நேரத்திலும் விஷயங்கள் மோசமடையக்கூடும் என்று முதல்வர் பினராயி விஜயன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ttn

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “பிரார்த்தனை மற்றும் மதக் கூட்டங்களில் ஒரு பெரிய கூட்டம் உள்ளது. இது தற்போதைய சூழ்நிலையில் தவிர்க்கப்பட வேண்டும். மதத் தலைவர்கள் கூட்டத்தைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.