வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்.. நடிகர் சித்தார்த், திருமாவளவன் உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

 

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்.. நடிகர் சித்தார்த், திருமாவளவன் உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து பல்வேறு மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து பல்வேறு மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, மம்தா பேனர்ஜி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ttn

டெல்லியில் மாணவர்கள் தாக்குதலைக் கண்டித்து சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 2 நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த போராட்டத்திற்கு  நடிகர் சித்தார்த், இசை கலைஞர் டி.எம் கிருஷ்ணா உள்ளிட்டோர் நேரில் சென்று தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ttn

அதில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் விதியை மீறி போராட்டம் நடத்தியதாக திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட 600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.