‘வள்ளுவரை மதித்தால் ஈ.வெ.ரா வை ஏற்க மாட்டோம் என்று அறிவியுங்கள்’ : ஹெச். ராஜா சர்ச்சை பதிவு!

 

‘வள்ளுவரை மதித்தால் ஈ.வெ.ரா வை ஏற்க மாட்டோம் என்று அறிவியுங்கள்’ : ஹெச். ராஜா சர்ச்சை பதிவு!

காவி உடையில், பட்டை, ருத்ராட்சம்  அணிந்து கொண்டு இருந்த வள்ளுவரை புதிதாய் உருவாக்கி சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர் பாஜகவினர்

வள்ளுவர் என்றால் ஒரு கையில் எழுத்தாணி  மற்றும் மற்றொரு கையில் ஓலைச்சுவடி வைத்துக்கொண்டு அமர்ந்த நிலையில்  இருப்பார் என்பது தான் பெரும்பாலும் நாம் பாடப்புத்தகங்களில் பார்த்திருப்போம்.

valluvar

ஆனால் காவி உடையில், பட்டை, ருத்ராட்சம்  அணிந்து கொண்டு இருந்த வள்ளுவரை புதிதாய் உருவாக்கி சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர் பாஜகவினர்.  உலகமக்கள் அனைவராலும் போற்றப்படக் கூடிய உலகப்பொதுமறை என்ற நூலை தந்த அய்யன் வள்ளுவனை மதம் என்ற ஒரு வட்டத்துக்குள் அடைப்பது ஆபத்தமானது என்று பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில்,  ‘ஈ.வெ.ரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். சனியன் தமிழ் வேண்டாம் என்றார். திருக்குறளை தங்கத்தட்டில் உள்ள மலம் என்று அருவருக்கத்தக்க முறையில் விமர்சித்தார்.
 

hraja

தமிழ் மற்றும் திருவள்ளுவரை மதிப்பதாக இருந்தால் ஈ.வெ.ரா வை ஏற்க மாட்டோம் என திக,திமுக, கம்யூனிஸ்ட்கள் அறிவிக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். 

valuvar

முன்னதாக பிள்ளையார்பட்டி உள்ள வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து , கற்பூரம் காட்டி வழிபட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.