வலையில் சிக்கிய ‘ஒன்றரை டன்’ எடை கொண்ட உளுவை மீன் : மீனவர்கள் மகிழ்ச்சி!

 

வலையில் சிக்கிய ‘ஒன்றரை டன்’ எடை கொண்ட உளுவை மீன் : மீனவர்கள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் வில்சன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் வில்சன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் எப்போதுமே தன் மீனவர்களுடன் கடலுக்கு செல்வது வழக்கம். அதே போல, நேற்றும் மீன் பிடிக்க நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் வில்சன். 

ttn

அவர்கள் கடலில் வலைபோட்ட சிறிது நேரத்திலேயே, வலை மிகவும் காணமாக இருந்ததால் பெரிய மீன் ஏதோ சிக்கியிருக்கும் என்று உணர்ந்த வில்சன், வலையுடன் கரை திரும்பியுள்ளார். அதன் பின்னர், அந்த மீனை சுமார் 15 பேருக்கு மேல் சேர்ந்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அவரின் வலையில் சிக்கிய அந்த மீன் அம்மை உளுவை மீன் என்றும் அது சுமார் ஒன்றரை கிலோ எடை இருக்கும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாகப் பெரிய மீன் சிக்கினால் அது நல்ல விலைக்குப் போகும். அதனால் வில்சனும் அவரது நண்பர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.