வலையில் இருந்து பாம்பை மீட்க முயன்ற நபர்.. அதே பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்!

 

வலையில் இருந்து பாம்பை மீட்க முயன்ற நபர்.. அதே பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்!

இன்று காலை அந்த வலையினுள் 6 அடி நீளம் கொண்ட விஷப்பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆரப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்த நபர் ராஜசேகர் (35). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். அவரது கடைக்கு அருகே இருக்கும் ஒரு வீட்டில் பாம்பு அடிக்கடி வருவதால், அவை உள்ளே புகாமல் இருக்க வலை ஒன்றை அமைத்துள்ளனர். இன்று காலை அந்த வலையினுள் 6 அடி நீளம் கொண்ட விஷப்பாம்பு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது.

ttn

வலையில் சிக்கி உயிருக்கு போரடிக் கொண்டிருந்த அந்த பாம்பை, ராஜசேகர் மீட்க முயன்றுள்ளார். ஆனால் அவரை அந்த பாம்பு கையில் கடித்துள்ளது. அது மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்பு என்பதால், விஷம் உடனே அவர் உடம்பில் பரவியுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாம்பை காப்பாற்ற முயன்ற ராஜசேகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.