வலுக்கும் எதிர்ப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!

 

வலுக்கும் எதிர்ப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!

ராஜராஜசோழன் குறித்து பேசிய விவகாரத்தில்  இயக்குநர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்

ராஜராஜசோழன் குறித்து பேசிய விவகாரத்தில்  இயக்குநர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

rajinth

ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித், ‘மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர் மன்னர் ராஜராஜசோழன். அவரது ஆட்சியிலிருந்துதான்  ஜாதி பிழவு, தேவதாசி முறை ஆகியவை கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்கள்  ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவருடைய ஆட்சிதான் இருப்பதிலேயே  இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்’ என்று கூறியிருந்தார். பா. ரஞ்சித்தின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர்.  இதையடுத்து  ராஜராஜன் சோழன் பற்றி தவறாகப்  பேசியதாக இயக்குநர்  பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ranjith

இதைத்  தொடர்ந்து  ராஜராஜசோழன் பற்றி அவதூறாகப் பேசியதாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள்  காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து  2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

hc

இந்நிலையில்  இயக்குநர் பா.ரஞ்சித், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அதில், ‘வரலாற்றுத் தகவலின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும், தனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது கருத்தை  சமூக வலைதளங்களில் தவறான நோக்கத்தில் பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.  இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.