வற்புறுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் மனைவி தற்கொலை; அதிர்ச்சி சம்பவம்!

 

வற்புறுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் மனைவி தற்கொலை; அதிர்ச்சி சம்பவம்!

திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆகிய நிலையில், தேர்தலில் போட்டியிட கணவன் கட்டாயப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எரங்குட்டாப்பள்ளி: திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆகிய நிலையில், தேர்தலில் போட்டியிட கணவன் கட்டாயப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் எரங்குட்டாப்பள்ளியைச் சேர்ந்தவர் லிங்காமையா. இவருக்கும், ராதா என்கிற 22 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 

இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக மாப்பிள்ளைக்கு இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக, ராதாவின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், குடும்ப பொருளாதார சூழல் காரணமாக வாங்கி கொடுக்க இயலாமல் போயுள்ளது. 

இதனை காரணம் காட்டி 5 லட்ச ரூபாய் பணத்தை வரதட்சணையாக பெற்று வருமாறு கூறி, ராதாவை அவரது பெற்றோர் வீட்டுக்கு கணவர் லிங்காமையா அனுப்பி வைத்துள்ளார். அதோடு இன்றி, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுமாறும் மனைவி ராதாவை அவரது கணவர் வற்புறுத்தியுள்ளார்.

இந்த தகவல்களை, தன் தாயிடம் கூறி கதறிய அப்பெண், தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்களும், ராதா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.