வறுமையில் மக்கள்… 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய ஆப்ரிக்க மன்னர்!

 

வறுமையில் மக்கள்… 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய ஆப்ரிக்க மன்னர்!

மக்கள் வறுமையில் கஷ்டப்படும்போது தன்னுடைய 15 மனைவிகளுக்காக 19 ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை தென்னாப்பிரிக கண்டத்தில் உள்ள எஸ்வாத்தினி நாட்டு மன்னர் வாங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் வறுமையில் கஷ்டப்படும்போது தன்னுடைய 15 மனைவிகளுக்காக 19 ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை தென்னாப்பிரிக கண்டத்தில் உள்ள எஸ்வாத்தினி நாட்டு மன்னர் வாங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

african

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள எஸ்வாத்தினி நாட்டின் மன்னராக இருப்பவர் மூன்றாம் ஸ்வதி. உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், தன்னுடைய 15 மனைவிகளுக்காக ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். ஒவ்வொரு மனைவியும் விரும்பியது போல காரில் மாற்றங்கள் செய்து வாங்கப்பட்டுள்ளது.

african

மேலும், மன்னர் தன்னுடைய பயன்பாட்டுக்காக பிரத்தியேகமாக ஒரு காரை கூடுதல் சொகுசு வசதிகள் பொருத்தி வாங்கியுள்ளார்.  இது தவிர தன்னுடைய 23 பிள்ளைகள் மற்றும் அரச குடும்பத்தினர் பயன்படுத்துவதற்காக டசன் கணக்கான பி.எம்.டபிள்யூ கார்களையும் ஆர்டர் செய்துள்ளாராம். 

african

ஏற்கனவே இவரிடம் 20 மெர்சிடிஸ் மேபேச் புல்மேன், மேபேச் 62, பி.எம்.டபிள்யூ எக்ஸ்6 என்று பல சொசு கார்கள் உள்ளதாம். எஸ்வாத்தினி செல்வம் கொழிக்கும் நாடாக இருந்தாலும் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலையில் மன்னரின் பலதார திருமணம், சொகுசு வாழ்க்கை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மன்னரின் சொசுகு வாழ்க்கை, கார்களைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக, அவற்றை படம் எடுக்க மன்னர் தடைவிதித்துள்ளாராம்.