வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய குடும்பம்: 3 மகள்களுடன் விஷம் குடித்த தாய்..!

 

வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய குடும்பம்: 3 மகள்களுடன் விஷம் குடித்த தாய்..!

குடும்பத்தைத் தனி ஆளாக சமாளிக்க லட்சுமி சிரமப்பட்டு வந்துள்ளார். வறுமையைத் தாங்க முடியாத இவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவு செய்து, 3 மகள்களுக்கும் இன்று காலை காபியில் விஷத்தைக் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார்

தேனி மாவட்டம் போடியில், லட்சுமி என்ற பெண் தனது 3 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். லட்சுமியின் கணவர் பால்பாண்டி 2 வருடங்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டதால் குழந்தைகளைத் தனியாளாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அதனால், லட்சுமி தையல் வேலை செய்து தனது 3 குழந்தைகளையும் காப்பாற்றி வந்துள்ளார். குழந்தைகள் அனுசியா 11ஆம் வகுப்பும், ஐஸ்வர்யா 9 ஆம் வகுப்பும், அக்க்ஷயா 5 ஆம் வகுப்பும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

Poison

இந்நிலையில், குடும்பத்தைத் தனி ஆளாக சமாளிக்க லட்சுமி சிரமப்பட்டு வந்துள்ளார். வறுமையைத் தாங்க முடியாத இவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவு செய்து, 3 மகள்களுக்கும் இன்று காலை காபியில் விஷத்தைக் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார்.காலையிலிருந்து லட்சுமியும் அவரது குழந்தைகளும் வெளியே வராததால் சந்தேகத்தில் வீட்டில் அருகில் வசிப்போர் கதவைத் திறக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது, லட்சுமி தனது 3 குழந்தைகளுடன் விஷம் அருந்திவிட்டு வாயில் நுரைதள்ளிய நிலையில் கீழே கிடந்துள்ளார். 

Poison

உடனே காவல்துறைக்கு பொது மக்கள் தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் அவர்களின் நிலையை பரிசோதித்ததில் அனுஷியாவும் ஐஸ்வர்யாவும் வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. லட்சுமியும், இளைய மகள் அக்க்ஷயாவும் உயிரோடு இருந்த நிலையில், அவர்களைத் தேனி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தேனியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, தேனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, லட்சுமி ஏன் அந்த முடிவை எடுத்தார், யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்