வர்மா திரைப்படத்தில் இணைந்த பிரபலம்! வெளியானது அறிவிப்பு!
துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகவிருக்கும் ‘வர்மா’ திரைப்படத்தில் புதிய ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார்.
சென்னை: துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகவிருக்கும் ‘வர்மா’ திரைப்படத்தில் புதிய ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தமிழில் இப்படத்தைப் பாலா ‘வர்மா’ என்ற டைட்டிலில் இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தி தராததால் இப்படத்தை தயாரித்த இ4 என்டர்டெயின்மென்ட் கைவிட்டதாகச் சமீபத்தில் அறிவித்தது. மேலும் துருவ் விக்ரமை வைத்து மீண்டும் இப்படத்தை வேறு புதிய படக்குழுவுடன் உருவாக்கவுள்ளதாக என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வர்மா படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கவுள்ளார். அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இப்படத்தை இயக்குள்ளார்.
@dop007 @proyuvraaj @E4Emovies Happy to have Ravi K Chandran on board as our DOP for the Tamil remake of Arjun Reddy Welcome back to Tamil Cinema after 7aum Arivu
— MUKESH RATILAL MEHTA (@e4echennai) February 18, 2019
இந்நிலையில்,பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் வர்மா படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இவர் சூர்யா நடித்த 7ஆம் அறிவு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ‘வர்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பணியாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.