வரும் திங்கள் கிழமை முதல் ப்ரீ கேஜி, எல்.கே.ஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடல்?!

 

வரும் திங்கள் கிழமை முதல் ப்ரீ கேஜி, எல்.கே.ஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடல்?!

100க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.

100க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக  கொரோனாவால் சவுதியிலிருந்து திரும்பிய 70 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் மக்களின் பீதி இன்னும் அதிகரித்தது. 

ttn

அதனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளும் அறிவுறுத்தி வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவற்றை மூடும் படி கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பெரும்பாலும் குழந்தைகளை எளிதில் தாக்கும் என்பதாலும், அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தெரியாது என்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் படி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துவிட்டது.

rtt

இந்நிலையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிக இடங்களில் பரவி வருவதால் வரும் . திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ப்ரீ கேஜி, எல்.கே.ஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடப்பட வாய்ப்புள்ளதாகவும் அதனை அரசு விரைவில் அறிவுக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.