வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்கிறது தபால் துறை தேர்வு!

 

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்கிறது தபால் துறை தேர்வு!

தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும்

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்கிறது தபால் துறை தேர்வு!

நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி நடக்கிறது.

தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை 14 தேதி நாடுமுழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கு திமுக, அதிமுக  உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து  மாநிலங்களவையில் கடந்த 16 ஆம் தேதி  அதிமுக எம்.பிக்கள்  தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டனர்.மேலும் தமிழக எம்பிக்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பிக் கூச்சலிட்டனர். இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கடந்த ஜூலை 14 தேதி நடைபெற்ற தேர்வை ரத்துசெய்தும் உத்தரவிட்டார். 

இந்நிலையில் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என தபால் துறை அறிவித்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் அம்மாநில மொழிகளில் தபால் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தமிழ் மொழியில் தேர்வு நடைபெறவுள்ளது.