வருமான வரித்துறை வழக்கு: விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட்!

 

வருமான வரித்துறை வழக்கு: விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட்!

நடிகர் விஷாலுக்குச் சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

சென்னை: நடிகர் விஷாலுக்குச் சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

நடிகர் விஷால் சென்னையில் சொந்தமாக ஃபிலிம் ஃபேக்டரி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கிய பணத்துக்கு வரிப் பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகையை, நிறுவனத்தின் உரிமையாளர் நடிகர் விஷால் வருமான வரித்துறைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை. 

இதனால் இது குறித்து வருமான வரித்துறை, நடிகர் விஷாலுக்குப் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் எந்த வித பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், விஷால் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதனால் விரைவில் விஷால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.