வரி ஏய்ப்பு எதிரொலி: பிரபல ஹோட்டல்களில் 2வது நாளாக ஐ.டி.ரெய்டு!

 

வரி ஏய்ப்பு எதிரொலி: பிரபல ஹோட்டல்களில் 2வது நாளாக  ஐ.டி.ரெய்டு!

தமிழகம் முழுவதும் 32 பிரபல உணவகங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து இரண்டாவது  நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை: தமிழகம் முழுவதும் 32 பிரபல உணவகங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து இரண்டாவது  நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவிட்ஸ், மற்றும் ஹாட் பிரட்ஸ் ஆகிய உணவகங்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனையை குறைத்துக் காட்டி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்தப் புகாரை அடுத்து, 4 உணவு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3ம் தேதி முதல்   சோதனை நடத்தி வருகின்றனர். இந்த உணவகங்களின் அனைத்துக் கிளைகள், இயக்குநர்களின் வீடுகள் மற்றும் கார்பரேட் அலுவலகங்கள் என இந்நிறுவனங்களுக்குச் சொந்தமான, மாநிலம் முழுவதும் உள்ள 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கணக்கில் காட்டாத பணத்தில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா? பணப்பரிமாற்றம் ஏதும் நடைபெற்றுள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மொத்தமுள்ள 32 இடங்களில், 10 இடங்களில் சோதனை முடிவடைந்துள்ளதாகவும், மிஞ்சியுள்ள 22 இடங்களில் தொடர்வதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.