வரிவிலக்கு கோர மாட்டோம் என உறுதியளிப்பார்களா? ஏ.ஆர்.முருகதாஸ் மீது அமைச்சர் பாய்ச்சல்!

 

வரிவிலக்கு கோர மாட்டோம் என உறுதியளிப்பார்களா? ஏ.ஆர்.முருகதாஸ் மீது அமைச்சர் பாய்ச்சல்!

அரசின் இலவசத் திட்டங்களை குறைகூறும் திரைத்துறையினர், திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கோர மாட்டோம் என உறுதியளிப்பார்களா என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: அரசின் இலவசத் திட்டங்களை குறைகூறும் திரைத்துறையினர், திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கோர மாட்டோம் என உறுதியளிப்பார்களா என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்கக் கோரி தமிழகத்தில் பல திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.இந்த வழக்கில், தன்னைக் காவல்துறை எந்நேரமும் கைது செய்யக் கூடும் என்பதால் முன் ஜாமீன் கோரி நவம்பர் 9-ம் தேதி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நவம்பர் 27-ம் தேதி வரை ஏ.ஆர்.முருகாதாஸை கைது செய்யக் கூடாது என இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கமாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில், விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகளைப் படத்தில் வைத்தது தனது கருத்து சுதந்திரம் எனவும், அதனால் மன்னிப்பு கேட்க முடியாது. இனிவரும் காலங்களில் தனது திரைப்படங்களில் அரசை விமர்சிக்கும் காட்சிகளை வைக்க மாட்டேன் எனும் உத்தரவாதத்தையும் வழங்க முடியாது என ஏ.ஆர்.முருகதாஸ்  உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ள கருத்து குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ‘பல கோடி ரூபாய்களை ஊதியமாகப் பெறும் திரைத்துறையினர், தங்களின் திரைப்படங்களுக்கு அரசிடம் வரிவிலக்கு தருமாறு கேட்க மாட்டோம் எனக் கூறுவார்களா? ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே விலையில்லா திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறிய அவர், மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பாக, திரைத்துறையினர் தங்களை திரும்பிப் பார்க்க வேண்டும். இலவச திட்டங்கள் வேண்டாம் எனக் கூறுபவர்கள், தங்களின் படங்களுக்கு வரிவிலக்கு வேண்டாம் எனச் சொல்லிவிட்டு, பிறகு தங்கள் படங்களை வெளியிடட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.