வரலாறு காணாத விலை உயர்வு…புதிய உச்சத்தில் தங்க விலை!

 

வரலாறு காணாத விலை உயர்வு…புதிய உச்சத்தில் தங்க விலை!

கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி சரிந்தது மீண்டும் ரூ.32 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,231க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.872 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.33,848க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.70க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,700க்கு விற்கப்படுகிறது.