வரலாறு காணாத உச்சம்: 30 ஆயிரத்தை தொட்டது தங்கத்தின் விலை!

 

வரலாறு காணாத உச்சம்: 30 ஆயிரத்தை தொட்டது தங்கத்தின் விலை!

சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. 

ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க- சீன வர்த்தகப் போரினால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால் உள்ளூரிலும் கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின்  விலை  ரூ. 3,765க்கு விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ. 228 அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.30,120க்கு விற்கப்படுகிறது. 

gold

வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உச்சம் பெற்றுள்ளது சாமானிய மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.