வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தால் சாமி குத்தமாம்!

 

வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தால் சாமி குத்தமாம்!

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பாஞ்ச் மாவட்டம், குச்சேயி கிராமத்தில் வரதட்சணை வாங்காமல் எவரும் திருமணம் செய்யக்கூடாது என்ற வழக்கம் காலம் காலமாக தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பாஞ்ச் மாவட்டம், குச்சேயி கிராமத்தில் வரதட்சணை வாங்காமல் எவரும் திருமணம் செய்யக்கூடாது என்ற வழக்கம் காலம் காலமாக தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அந்த கிராமத்தில் பெண் ஒருவர் நோயால் உயிரிழந்துள்ளார். அவரின் திருமணத்தின்போது வரதட்சணையாக 2 மாடுகள், ஒரு ஆடு, மூன்று சேலைகள் தருவதாக கூறியிருந்தார். ஆனால், அதனை அந்த பெண் வீட்டார் கொடுக்கவில்லை என தெரிகிறது. 

dowri

வரதட்சணை கொடுக்கவில்லை எனக்கூறி உள்ளூர்வாசிகள் அந்த பெண்ணின் உடலை தகனம் செய்ய அவரது கணவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த பெண் இறந்து மூன்று நாட்கள் ஆகியும் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் கணவருக்கு அனுமதி தரவில்லை எனக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்பெண்ணின் உடலை தகனம் செய்ய உதவினர்.