வரதட்சணை கொடுமை: சிகரெட்டால் குழந்தைக்கு சூடு போட்டு மனைவியை மிரட்டிய கணவர்!?

 

வரதட்சணை கொடுமை:  சிகரெட்டால்  குழந்தைக்கு சூடு போட்டு  மனைவியை மிரட்டிய கணவர்!?

வரதட்சணை கேட்டு பச்சிளம் குழந்தைக்குச் சூடு வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்: வரதட்சணை கேட்டு பச்சிளம் குழந்தைக்குச் சூடு வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், 8 மாத  குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. கார்த்திகேயன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.கார்த்திகேயனுக்கு வருமானம் குறைவு என்பதால் தனது மனைவியை வரதட்சணை கேட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்குமிடையே தகராறு  ஏற்பட்டுள்ளது. 

dowry

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கார்த்திகேயன் மனைவி பரமேஸ்வரியிடம் வரதட்சணை கேட்டு சண்டை போட்டுள்ளார். இவர்களுக்குள் சண்டை முற்றவே, பச்சிளம் குழந்தைக்கு சிகரெட்டால்
சூடு வைத்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி, தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்கள் மகனுக்கு ஆதரவாகப் பேசியதோடு, குழந்தையையும், மருமகளையும் வீட்டில் பூட்டி வைத்துள்ளனர்.

abbay

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குழந்தையுடன் அங்கிருந்து  வெளியேறிய பரமேஸ்வரி குழந்தையைச் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் வரதட்சணை கொடுமை குறித்து  செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

arrest

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திகேயன் மீது, குழந்தைக்குச் சூடுபோட்டது, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை  கைது செய்ததது குறிப்பிடத்தக்கது.