வயிற்று வலியால் உயிரிழந்த பெண்.. பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ்; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

 

வயிற்று வலியால் உயிரிழந்த பெண்.. பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ்; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

அந்த பெண்ணின் மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12ஐ நெருங்கிக் கொண்டே வருகிறது. சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,117ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக ராயபுரத்திலும் கோடம்பாக்கத்திலும் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னையில் 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் சென்னை ராயபேட்டை மருத்துவமனையில் வயிற்று வலியால் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 16 ஆம் தேதி வயிற்றுவலியால் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு வயிற்று வலி அதிகரித்த நிலையில் அன்று இரவே அந்த பெண் உயிரிழந்துள்ளார். இறந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த பெண்ணின் மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து இன்று அந்த பெண்ணின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் அந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.