வயிற்றுக்குள் துணியை வைத்து சிசேரியன்! மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த பெண்!! 

 

வயிற்றுக்குள் துணியை வைத்து சிசேரியன்! மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த பெண்!! 

விருத்தாசலம் அருகே பிரசவத்திற்கு பின் பெண்ணின் வயிற்றுக்குள் துணியை வைத்து அறுவை சிகிச்சை செய்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருத்தாசலம் அருகே பிரசவத்திற்கு பின் பெண்ணின் வயிற்றுக்குள் துணியை வைத்து அறுவை சிகிச்சை செய்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

women death

ஆலடி அருகே உள்ள கலர் குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது அனைவி பிரியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 27 ஆம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் 4 நாட்களாகியும், பிரியாவின் வயிறு வீக்கமாக இருந்துள்ளது. உடல்நிலையில் மோசமடைந்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக பிரியாவை கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரசவத்தின் போது அரசு மருத்துவர்கள் பிரியாவின் வயிற்றில் பழைய துணி மற்றும் பஞ்சுகள் வைத்து அறுவை சிகிச்சை செய்ததாகவும், அதுவே அவரது உயிரிழப்பு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.