“வயிறு வீங்கற வரைக்கும் வாய மூடிட்டு இருக்கியே ” -பக்கத்து வீட்டுக்காரனிடம் ஏமாந்த பெண்.

 

“வயிறு வீங்கற வரைக்கும் வாய மூடிட்டு இருக்கியே ” -பக்கத்து வீட்டுக்காரனிடம் ஏமாந்த பெண்.

பக்கத்து வீட்டு வாலிபரின் பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்,எட்டு மாதத்திற்கு பிறகு அவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் .

“வயிறு வீங்கற வரைக்கும் வாய மூடிட்டு இருக்கியே ” -பக்கத்து வீட்டுக்காரனிடம் ஏமாந்த பெண்.

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தின் சர்தானா நகரில் உள்ள மொஹல்லா கெவனில் ஒரு 15 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த பெற்றோர் அந்த பெண்ணை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள் .அப்போது அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் ஒரு 20 வயதான வாலிபர் இருந்தார் ,

அந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு வலை வீசினார் .ஆனால் அந்த பெண் அவர் விரித்த வலையில் விழவில்லை .அதனால் அந்த  பெண்ணை பலாத்காரம் செய்ய சரியான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்து கொண்டிருந்தார் .அதன் படி கடந்த  எட்டு மாதங்களுக்கு முன்பு அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது அந்த  வாலிபர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்தார் .அதன் பிறகு அவர் அந்த பெண்ணை பாலியல்  பலாத்காரம் செய்தார்.  பிறகு அவர் அந்த பெண்ணிடம் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் குடும்பத்தையே கொலை செய்து விடுவதாக மிரட்டினார் .இதனால்  அந்த பெண் இந்த பலாத்கார விஷயத்தை  யாரிடமும் சொல்லாமல் மறைத்தார்  .ஆனால் அந்த பெண் அதன் பிறகு கர்ப்பமானார் .இந்த கர்ப்ப விஷயத்தை அவர் தன்னுடைய வீட்டில் மறைத்து வைத்திருந்தார்  .ஆனால் நாளடைவில் அந்த பெண்ணின் வயிறு வீங்க தொடங்கியது .அதை அந்த பெண்ணின் தாயார் கவனித்தார் .அதனால் ஒரு மருத்துவரிடம் அந்த பெண்ணை அழைத்து சென்றபோது, அவரை பரிசோதனை செய்த டாக்டர்  அவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார் .அதை  கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தாய், இந்த கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று மகளிடம் விசாரித்தார்  .அப்போது அந்த பெண் பக்கத்து வீட்டு வாலிபரை காமித்து கொடுத்தார் அதை கேட்டு அதிர்ந்த அந்த தாய், அந்த வாலிபர் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் இது பற்றி  தீர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

“வயிறு வீங்கற வரைக்கும் வாய மூடிட்டு இருக்கியே ” -பக்கத்து வீட்டுக்காரனிடம் ஏமாந்த பெண்.