வயலில் கசமுசா செய்த வாலிபர்! மண்வெட்டியால் தாக்கிய இளம்பெண்!!

 

வயலில் கசமுசா செய்த வாலிபர்! மண்வெட்டியால் தாக்கிய இளம்பெண்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் கிராமத்தில் சுமார் ஐந்தாயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் விவசாய பணிகள் ஈடுபடுவது வழக்கம்.மேலும், வயலில் களை எடுத்தல், களை கொத்துதல், செடிகளுக்கு உரம் வைத்தல், புற்கள் பறித்தல் போன்ற பணிகளில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த நிலமாக இருந்தால் நிலத்தின் உரிமையாளர்களே தனியாக தோட்ட வேளைகளில் ஈடுபடுவர். ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் கிராமத்தில் பெண் ஒருவர் வயலில் தனியாக களை பறிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, அந்தப் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

உடனடியாக அந்தப்பெண் கையில் இருந்த மண்வெட்டியால் மர்ம நபரை தாக்கியதுடன், கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து இதேபோன்று வயலில் தனியாக வேலை பார்க்கும் பல பெண்களிடம், அந்த நபர் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மர்ம நபரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தின்னப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குற்றவாளியை கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.