வயதான தாய்.. நடுரோட்டில் தள்ளிவிட்ட மகன்… 7 நாட்களாக வெயில், மழையில் தவித்த பரிதாபம்!

 

வயதான தாய்.. நடுரோட்டில் தள்ளிவிட்ட மகன்… 7 நாட்களாக வெயில், மழையில் தவித்த பரிதாபம்!

கூட்டு குடும்ப கலாசாரம் எல்லாம் பள்ளி பாடப்புத்தகங்களில் ‘முன்பொரு காலத்தில்’ என்று இடம் பிடிக்கத் துவங்கி விட்டது. அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் கணவன், மனைவி, குழந்தைகள் என்று தனிக்குடித்தன வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வந்த இந்தியர்களில்  பெரும்பாலானோர் இப்போது, ‘சிங்கிள் பேரெண்ட்’ என்று பெருமையாக சொல்லிக் கொள்ளவே விரும்புவதாக மேலும் அதிர்ச்சியளிக்கின்றன சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

கூட்டு குடும்ப கலாசாரம் எல்லாம் பள்ளி பாடப்புத்தகங்களில் ‘முன்பொரு காலத்தில்’ என்று இடம் பிடிக்கத் துவங்கி விட்டது. அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் கணவன், மனைவி, குழந்தைகள் என்று தனிக்குடித்தன வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வந்த இந்தியர்களில்  பெரும்பாலானோர் இப்போது, ‘சிங்கிள் பேரெண்ட்’ என்று பெருமையாக சொல்லிக் கொள்ளவே விரும்புவதாக மேலும் அதிர்ச்சியளிக்கின்றன சமீபத்திய ஆய்வு முடிவுகள்.
கல்யாணம் செய்து வைக்கும் வரையில் இருக்கும் தாய் பாசம், மனைவியோ, கணவனோ வந்ததும் காணாமல் போய்விடுகிறது. இதில் சொத்துக்களை எல்லாம் பெயர் மாற்றி எழுதி வைத்தால் அதோ கதி தான்!

samugathai

கோவில்பட்டி பங்களா 4-வது தெருவில் வசித்து வருபவர் சண்முகத்தாய். 75 வயதான இவரது மகன் சீனி. வயோதிகத்தின் காரணமாகவும், நோயின் தாக்கத்தினாலும் எழுந்து நடமாட முடியாத நிலைக்குச் சென்றார் சண்முகத்தாய். பத்து மாதம் பாரம் என்று நினைத்து வயிற்றில் இருந்து இறக்கி வைக்காமல் வளர்த்து வந்த இவரது மகன் சீனி, நடமாட முடியாத தாயைப் பார்த்துக் கொள்வது கடினம் என முடிவு செய்து, யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் தாயை அதே தெருவின் முனையில் நடுரோட்டில் கொண்டு போய் உட்கார வைத்து விட்டு வீடு திரும்பியிருக்கிறார். 
கடந்த 7 நாட்களாக சாப்பாடு எதுவும் இல்லாமல், வெயிலிலும், மழையிலும் படுத்திருந்த சண்முகத்தாயை அந்த பகுதி மக்கள் பார்த்துவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் சொன்னார்கள். உடனடியாக கோட்டாட்சியர் விஜயா நடவடிக்கை எடுத்து, மருத்துவமனையில் மூதாட்டியைச் சேர்த்து விட்டு, சிகிச்சை முடிந்ததும், பாண்டவர் மங்கலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் முயற்சிகளை மேற்கொண்டார். பெற்ற தாயை நடுரோட்டில் தவிக்கவிட்ட மகன் சீனி மீது போலீசிலும் புகார் செய்துள்ளார் விஜயா!