வயதான தம்பதிக்கு தூக்க மாத்திரை…கிலோ கணக்கில் நகைகளை திருடி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பெண்கள் கைது!

 

வயதான தம்பதிக்கு தூக்க மாத்திரை…கிலோ கணக்கில் நகைகளை திருடி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பெண்கள் கைது!

கல்யாண்குமார் வீட்டில் வேலைபார்த்து வந்த லோகநாயகி மற்றும் ஷாலினி  இருவரும் தான் நகைகளை திருடியது தெரியவந்தது.

சென்னை எழும்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் கல்யாண் குமார் என்பவர் கடந்த 5-ம் தேதி ஆம் தேதி வீட்டில் நகை திருடு போனதாக  எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கல்யாண்குமார் வீட்டில் வேலைபார்த்து வந்த லோகநாயகி மற்றும் ஷாலினி  இருவரும் தான் நகைகளை திருடியது தெரியவந்தது.

அதாவது கல்யாண குமார் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த நிலையில் தனது அப்பா அம்மாவை பார்த்துக்கொள்ள லோகநாயகி மற்றும் ஷாலினி இருவரையும் நியமித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் நகைகளை சரிபார்த்த போது  பல பொருட்கள் வீட்டில் காணாமல் போனது தெரியவந்தது. இதனிடையே ஷாலினி வேலையை விட்டு திடீரென்று  நின்றுள்ளார்.

ttn

இந்நிலையில் கல்யாண குமார் போலீசில் புகார் கொடுத்த போது  போலீசார் கைரேகைகளை வைத்து விசாரித்து வந்துள்ளனர். அப்போது அதே  வீட்டில் வேலை செய்து வரும் சுபா என்பவரின் செல்போனிலிருந்து ஷாலினியை தொடர்புகொண்ட லோகநாயகி போலீசார் விசாரித்து வருவதை கூறியுள்ளார். அவர்கள் பேசியது கால் ரெக்கார்டர் மூலம் பதிவாகியிருந்ததையடுத்து லோகநாயகி மற்றும் ஷாலினி நீண்ட ஆண்டுகாலமாக கல்யாணகுமாரின் பெற்றோருக்கு உணவில் தூக்க மாத்திரையைக் கலந்துகொடுத்துவிட்டு,  கள்ளச்சாவி போட்டு நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து சுபா கல்யாண குமாரிடம் கூறியுள்ளார். 

ttn

இதை தொடர்ந்து எழும்பூர் போலீசார்  லோகநாயகி மற்றும் ஷாலினி மற்றும் அவர்களுக்கு உதவிய இருவர் என 4 பேரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் கிலோ கணக்கில் நகைகளை திருடி சொகுசு வாழ்க்கை  வாழ்ந்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி லோகநாயகி தனது மகளுக்கு ஆடம்பர திருமணம், கார் போன்றவற்றை வாங்கியுள்ளார்.  இதையடுத்து இருவரிடமிருந்து 1.75 கிலோ தங்கம் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணம், கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.