வயசானாலும் உன் திமுரும் அழகும் குறையல! சிரஞ்சீவி யாரை பார்த்து சொன்னார் தெரியாமா? 

 

வயசானாலும் உன் திமுரும் அழகும் குறையல! சிரஞ்சீவி யாரை பார்த்து சொன்னார் தெரியாமா? 

கடந்த 5 ஆம் தேதி மகேஷ்பாபு கதாநாயகனான நடித்த சரிலேரு நீகெவ்வரு படத்தில் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விஜய் சாந்தி, சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர். பல ஆண்டுகளுக்கு பின் இரண்டு ஜாம்பவான்களும் ஒரே மேடையில் காட்சித்தந்தது பார்வையாளர்களை குஷிப்படுத்தியது. 

கடந்த 5 ஆம் தேதி மகேஷ்பாபு கதாநாயகனான நடித்த சரிலேரு நீகெவ்வரு படத்தில் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விஜய் சாந்தி, சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர். பல ஆண்டுகளுக்கு பின் இரண்டு ஜாம்பவான்களும் ஒரே மேடையில் காட்சித்தந்தது பார்வையாளர்களை குஷிப்படுத்தியது. 

அப்போது ரசிகர்கள் மத்தியில் விஜய்சாந்தி பற்றி பேசிய சிரஞ்சீவி, விஜய்சாந்தி எப்போதும் என் ஹீரோயின்,  நாங்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. தேசிய அளவில் சிறந்த நடிகை என விருது பெற்றவர் விஜய் சாந்தி. என்னை விட்டு 15 ஆண்டுகள் தூரமாக விலகி போய் இருந்தார். இன்று மீண்டும் என்னுடன் வந்து இணைந்துள்ளார். நானும் விஜய்சாந்தியும் டி. நகரில் எதிர் எதிர் வீட்டில்தான் வசித்தோம், எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே விஜய் சாந்தி வலம் வந்தார்” என்று கூறினார்.

chiranjeevi

படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை பார்த்து சொல்வது போல இப்போது கூட அதே திமுரு, அதே ஃபிகர் நீ. எதுவும் குறையவில்லை என்றும் சிரஞ்சீவி காமெடியாக கூறினார். 

இதற்கு பதில் தரும் விதமாக சிரஞ்சீவியின் மைக்கை வாங்கி பேச தொடங்கிய விஜய் சாந்தி, “அரசியல் வேறு, சினிமா வேறு. நீ என் ஹீரோ. நான் உன் ஹீரோயின்” அவ்வளவுதான் என கலாய்த்தார். அரங்கிலிருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைத்தட்டினர்.