வன்னியர்களை வைத்து வியூகம் அமைத்த மு.க.ஸ்டாலின்… மரண அடி கொடுத்த ராமதாஸ்… பரபர பின்னணி.!

 

வன்னியர்களை வைத்து வியூகம் அமைத்த மு.க.ஸ்டாலின்… மரண அடி கொடுத்த ராமதாஸ்… பரபர பின்னணி.!

ஜெகத்ரட்சகன், துரைமுருகன் பன்னீர்செல்வம், போன்றவர்களை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக பேசவிட்டு காடுவெட்டி குரு குடும்பத்துக்கு துரோகம் செய்து விட்டார் என்றெல்லாம் பேசி வன்னிய இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க பார்த்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இத்தோடு அதிமுக காலி என்று அனைவராலும் பேசப்பட்ட நிலையில் இந்த இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவை உற்சாகப்படுத்தி உள்ளது.

சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக மீண்டும் பழைய கம்பீரத்தோடு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. இடைத்தேர்தலில் தங்களுக்குத் தான் வெற்றி  என்று இறுமாப்போடு இருந்த மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

காரணம் விக்கிரவாண்டி தொகுதியில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. இதனால் அங்கு பாமக செல்வாக்கோடு இருக்கிறது. அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். 

cv shanmugam

திமுக தோல்விக்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. விழுப்புரம்  மாவட்டம் முழுவதும் வன்னியர்கள் பெரும்பான்மையுடன் வசித்து வருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை சி.வி.சண்முகம் தான் மாவட்டச் செயலாளர். அவரை சில காலம் ஒதுக்கி வைத்திருந்த ஜெயலலிதா லட்சுமணனை மாவட்ட செயலாளராக நியமித்தார். அவரும் வன்னியரே.  அரசியல் விவகாரங்களில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு நேரடியாக வன்னியர்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜெயலலிதா தந்திரத்தோடு செயல்பட்டார். 

திமுக நிலைப்பாடு வேறு. விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளராக பொன்முடி இருந்த காலகட்டத்தில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் அளிக்க மாட்டார். இதனால் அவர் மீது வன்னியர்கள் அகடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர் சார்ந்த சமுதாயத்தை மட்டும் பதவியை அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பவர். 

விழுப்புரம் மாவட்டத்தை கட்சி அமைப்பு ரீதியாக திமுக மூன்றாக பிரித்தபோது வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கூட மாவட்ட செயலாளராக நியமிக்கப்பவில்லை. இது அம்மாவட்டத்துஇல் உள்ள திமுக வன்னியர்கள்ளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. பொன்முடி உடையார் சமுதாயம் மஸ்தான் இஸ்லாமியர், அங்கயற்க்ஜண்ணி யாதவர். இதனால் திமுகவில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று கொந்தளித்தனர். 

Anbumani

பாமகவில் செல்வாக்கு மிக்க தொகுதி என்பதால் அதன் மூலம் முழு வாக்குகளும் அதிமுகவிற்கு சென்று விட்டால் தாங்கள் நிச்சயம் தோல்வி அடைவோம் என்று திமுகவினருக்கு அச்சம் இருந்தது. இதன் காரணமாகவே திமுகவில் உள்ள முக்கிய வன்னிய பிரமுகர்களை பிரதானப்படுத்தி சட்டமன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது.  ஜெகத்ரட்சகன், துரைமுருகன் பன்னீர்செல்வம், போன்றவர்களை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக பேசவிட்டு காடுவெட்டி குரு குடும்பத்துக்கு துரோகம் செய்து விட்டார் என்றெல்லாம் பேசி வன்னிய இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க பார்த்தனர்.

 ஆனால் காடுவெட்டி குருவுக்கு என்றும் தந்தையாக ராமதாஸ் தான் செயல்பட்டார் என்பதை ஆழமாக பதிந்து வைத்துள்ளனர். திமுக வன்னிய பிரமுகர்கள் ராமதாஸ் மீது சுமத்திய பழியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவும் அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ராமதாஸை பிரச்சாரத்தின் போது கிழவன் என்று கடுமையாக விமர்சித்தார். இது வன்னியர்களை கொந்தளிக்க வைத்தது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதாக அறிக்கை விட்ட மு.க.ஸ்டாலின்னுக்கு புள்ளி விவரங்களோடு பாமக நிறுவனர் ராமதாஸ் பட்டியலாக வெளியிட்டார்.

stalin

ஏ.கோவிந்தசாமிக்கு திமுக ஆட்சிக்கு வந்தால்தான் மணிமண்டபம் கட்ட முடியுமா? ஏன் தற்போது கட்ட முடியாதா என்று ஸ்டாலினை கேள்விக்கணைகளால் திணற வைத்தார். திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பாமகவிற்கு சாதகமாக மாறியது. அவர் பேசிய சரக்கு மிடுக்கு எங்கிட்டதான் இருக்கு என்ற புகழ்மிக்க வாசகத்தை சமூகவலைதளங்களின் மூலமாக அனைவருக்கும் கொண்டு போய் சேர்த்தனர்.  அரக்கோணம் தொகுதியில் நான் வெற்றி பெற்றதற்கு காலணி மக்கள் தான் காரணம் என்று திருமாவளவனிடம் ஜெகத் ரட்சகன் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்டாலின் மிகவும் எதிர்பார்த்த ஜெகத்ரட்சகன் என்ன தான் செலவு செய்தாலும் தொகுதியில் செல்வாக்கு இல்லை.  இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜாதிரீதியாகவே இரு கட்சிகளும் அணுகியது.  விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக கம்பீரமாக வெற்றி பெற ராமதாஸ் வகுத்த வியூகமே காரணம். காடுவெட்டி குரு மரணத்திற்கு பிறகு வன்னியர்களை பாமகவிலிருந்து பிரித்து விடலாம்  என நினைத்த திமுக வன்னிய பிரமுகர்கள் மற்றும் லெட்டர்பேடு கட்சிகள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவால் கதிகலங்கி போயுள்ளனர்.