வன்னியர்களுடன் முக்குலத்தோரை ஒன்று சேர்த்த திரெளபதி… பிரபல நடிகர் எடுத்த முக்கிய முடிவு..!

 

வன்னியர்களுடன் முக்குலத்தோரை ஒன்று சேர்த்த திரெளபதி… பிரபல நடிகர் எடுத்த முக்கிய முடிவு..!

திரெளபதி படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை தவிர மற்ற சமூகத்தினர் பேராதரவு கொடுத்து வருகின்றனர். வடமாவட்டங்களில் வசிக்கும் வன்னியர் சமுதாய மக்கள் இந்தப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், தென்மாவட்டங்களில் வசிக்கும் முக்குலத்தோரும் திரெளபதிக்கு வரவேற்பு அளித்துள்ளனர். 

திரெளபதி படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை தவிர மற்ற சமூகத்தினர் பேராதரவு கொடுத்து வருகின்றனர். வடமாவட்டங்களில் வசிக்கும் வன்னியர் சமுதாய மக்கள் இந்தப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், தென்மாவட்டங்களில் வசிக்கும் முக்குலத்தோரும் திரெளபதிக்கு வரவேற்பு அளித்துள்ளனர். 

thropathi

திரெளபதி படத்தின் ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு சாதியினர் நடத்தும் நாடகக் காதலை படமாக்கி இருப்பதாக படக்குழு விளக்கம் அளித்தது.

ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்களும், காட்சிகளும் மற்றொரு தரப்பை சுட்டிக்காட்டும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதனால் மற்றொரு தரப்பு அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில், சாதி ஆணவப் படுகொலையை ஆதரிக்கும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியது எப்படி?” திரெளபதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் திரெளபதி படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. 

suresh

ஆனால் இந்தப்படத்திற்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்படும் என பாமக வழக்கறிஞர் பாலு அறிவித்து நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்
இந்நிலையில்  இந்தப்படத்தை தென்மாவட்டங்களில் வெளியிடவும், பாதுகாப்பு அளிக்கவும் முக்குலத்தை சேர்ந்த பல அமைப்புகளின் தலைவர்கள் முன் வந்துள்ளனர்.  தென் இந்திய ஃபார்வர்ட் ப்ளக் நிறுவனர் திருமாறன் ஜி, மறத்தமிழர் சேலை நிறுவனர் புதுமலர் பிரபாகரன்  ஆகியோரும்  ஆதரவளிக்க முன்முன் வந்துள்ளனர்.

thirumaran

அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப்படத்தை தென்மாவட்டங்களில் கொண்டு போய் சேர்க்க படத்தின் விநியோக உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார். ஆகையால் திரெளபதி விரைவில் திரைக்கு வர இருக்கிறாள்.