வனிதா விஜயகுமாருக்கு பாதுகாப்பு தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

வனிதா விஜயகுமாருக்கு பாதுகாப்பு தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமாருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமாருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள ‘மஞ்சுளா இல்லம்’ சினிமா ஷூட்டிங்கிற்காக வாடகைக்கு விடப்படுவது வழக்கம். இந்நிலையில், வீட்டை காலி செய்யுமாறு நடிகர் விஜயகுமார் கேட்டுக் கொண்டதாகவும், வனிதா விஜயகுமார் காலி செய்யாததாலும் அவர் மீது நடிகர் விஜயகுமார் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வனிதா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது நண்பர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

vanitha

இது தொடர்பாக பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகை வனிதா விஜயகுமார் தொடர்ந்து மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகை வனிதா விஜயகுமாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

வனிதா மற்றும் விஜயகுமார் இடையே வீடு யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை நிலவி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.