‘வனிதா சொன்ன ஒரே வார்த்தை’ : கதறி அழும் ஷெரின்!
பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது புரொமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது புரொமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இடையில் சுவாரசியம் கொஞ்சம் குறைய வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா நுழைந்தார். இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் மேலும் கலவரத்தைத் தூண்டும் வகையில் எலிமினேட் ஆகி வெளியே சென்ற அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
#Day74 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HI30o99kAc
— Vijay Television (@vijaytelevision) September 5, 2019
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஷெரின் சேரனிடம், அப்பேர் என்று சொன்னது என்னால தாங்கிக்க முடியல சார் . வேற ஒருத்தங்க வாயிலிருந்து வந்திருந்தாலும் ஓகே. ஆனா அவ என் ப்ரெண்ட். எனக்கு ரொம்பவும் ஹெர்ட் ஆகுது சார். நான் அந்த பையன் கூட பேசல, வனிதா கூடவும் பேசல, வீட்ல வேற யார் கூடவும் பேசல’ என்று கதறி அழுகிறார்.
வீட்டில் யாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும், அவர்கள் மனம் தளர்ந்து போகும் நேரத்தில் உடனிருந்து அவர்களை ஊக்குவிக்கும் ஷெரின் இன்று கதறி அழுவது கண்டிப்பாக அவரது ரசிகர்கள் மத்தியில் வனிதாவின் மீதான வெறுப்பை அதிகரித்துள்ளது.