வனிதாவை வாத்து என்று கலாய்த்து மாட்டிக்கொண்ட கஸ்தூரி 

 

வனிதாவை வாத்து என்று கலாய்த்து மாட்டிக்கொண்ட கஸ்தூரி 

பிக்  பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக்  பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் தொடங்கி 58 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இது வரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், மதுமிதா, சாக்ஷி அகர்வால் மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் சாண்டி, தர்ஷன், கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர். 

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான luxury பட்ஜெட் டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் பள்ளி குழந்தைகளாக மாறி கஸ்தூரி ஆசிரியராக மாறியுள்ளது போல் முதல் புரோமோ வெளியானது. அதைத்தொடர்ந்து இன்றைக்கான  இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் பள்ளி குழந்தைகளாக மாறி ஆக்டிவிட்டி ஏரியாவில் அமர்ந்துள்ளனர். 

அப்போது கஸ்தூரி, ‘வாத்து பாடலை பட இப்போ வாத்து வனிதா வரப்போறாங்க’ என்று கூறியுள்ளார். இதை கேட்ட நம்ப சண்டை கோழி வனிதா, சேரனிடம் சென்று, ‘மாணவர்கள் தப்பு செய்தால் டீச்சர் தண்டிக்குறாங்க. ஆனா டீச்சர் தப்பு பண்ண ஏன்? மன்னிப்பு கேட்க மாட்டிங்குறாங்க? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சாண்டியும், ‘வாத்து சொன்னதை நானும் கேட்டேன்’ என்று எரியுற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். ஆகமொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் ஒரு சண்டை உள்ளது என்று இதன்மூலம் தெரியவந்துள்ளது.