வந்தே பாரத்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த அதிவேக ரயிலுக்கு வந்த சோதனை?

 

வந்தே பாரத்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த அதிவேக ரயிலுக்கு வந்த சோதனை?

புதுதில்லி: பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எனும் அதிவேக ரயில் பாதியில் பழுதாகி நின்றது.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எனும் அதிவேக ரயில் பாதியில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் வேறு ரயில் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய வந்தே பாரத் ரயிலின் சேவையை நேற்று மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாரணாசியில் இருந்து டெல்லி செல்லும் வழியில் இந்த ரயில் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் வேறு ரயிலுக்கு மாற்றி அனுப்பப்பட்டனர்.

sfff

இதுகுறித்து ரயிலில் பயணித்த ஒருவர், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரயில் அப்படியே நின்றது. வண்டியில் புகை வாடை அடித்தது, ரயிலின் உட்கட்டமைப்பில் பிரச்சனை இருக்கலாம் என கூறப்பட்டது. அதனால் நாங்கள் வேறு ரயிலில் பயணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம் என தெரிவித்தார்.