வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ் வின்னர் ரித்விகா!
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டிச் சென்ற நடிகை ரித்விகா குறித்து சமூக வலைத்தளங்களில் உலாவும் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டிச் சென்ற நடிகை ரித்விகா குறித்து சமூக வலைத்தளங்களில் உலாவும் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று பிக் பாஸ் டைட்டிலை நடிகை ரித்விகா வென்றார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்த சில தவறுகளை தட்டிக் கேட்டும், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதத்தில் தனது கருத்துக்களை நேரடியாக பேசியும் மக்களை கவர்ந்தார். பிக் பாஸ் போட்டியில் ஒருவரை பற்றி புறம்பேசாத போட்டியாளராக கடைசி வரை தொடர்ந்த ரித்து, நேர்மையான போட்டியாளராகவும் பார்க்கப்பாட்டார்.
இந்நிலையில், பிக் பாஸ் போட்டி முடிந்து வெளியே வந்த ரித்விகாவுக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. மேலும், பிக் பாஸ் போட்டியில் வென்ற தொகையை சில தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியதாகவும் செய்தி உலாவுகிறது.
There are lots of rumours going around about my new movie offers and me donating to various organisation.
I will post details regarding my movie offers and other details in my Twitter account (@Riythvika).
Thanks a lot for your love and unconditional support— Riythvika✨ (@Riythvika) October 4, 2018
இது குறித்து நடிகை ரித்விகா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். எனது திரைப்பட வாய்ப்புகள் குறித்தும், நன்கொடை வழங்கியதாகவும் செய்திகள் பரவுகின்றன. எனது அடுத்தப்படம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நானே ரசிகர்களுக்கு தெரிவிப்பேன் என்று ரித்விகா கூறியுள்ளார்.