வட சென்னை 2 படம் கை விடப்பட்டதா? குழம்பியிருந்த ரசிகர்களை தெளிவுபடுத்திய தனுஷ்
வட சென்னை 2 படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சென்னை: வட சென்னை 2 படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் வெற்றிமாறன்- தனுஷ் காம்போ வில் கடந்த ஆண்டு வெளியான படம் வட சென்னை. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ள இந்த திரைப்படம் நல்ல விமர்சங்களை பெற்றது. இந்த படம் நிறைவடைந்த போதே இந்த படத்தின் 2 ஆம் பாதியை முடித்து வைத்திருந்தார் வெற்றி மாறன்.
அதைத்தொடர்ந்து ‘வடசென்னை 2’ படத்திற்காக ரசிகர்கள் காத்துத்திருந்த நிலையில்,அந்த படம் கைவிடவைப்பதாகப் பல செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார்.
Don’t know what caused this confusion among my fans. Vadachennai part 2 is very much on , Unless you see any official confirmation from my Twitter handle please do not believe in rumours regarding any project of mine. Thank you. Love you.
— Dhanush (@dhanushkraja) July 15, 2019
இது குறித்து அவரது பதிவில், ‘வடசென்னை 2 திரைப்படத்தின் திட்டத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. இந்த படம் மட்டுமின்றி எனது அனைத்து படங்கள் குறித்தும் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் தகவல்களை மட்டுமே ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனைவிடுத்துப் பரவிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்றும் தனுஷ் தனது ரசிகர்களுக்குக் கேட்டுக் கொண்டுள்ளார்.