வடமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்… சென்னையில் விடுதி உரிமையாளர் கைது!
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானது.
சென்னை: வடமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவந்த 54 வயதான விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை மீர்சாகிப் பேட்டை மார்க்கெட் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் வடமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக ஐஸ் ஹவுஸ் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானது.
அப்போது அங்கிருந்து 2 வடமாநில பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து அதன் உரிமையாளர் தமீம் அன்சாரி போலீசார் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.